Jan 142023

அறத்துப்பால் -இல்லறவியல் -புதல்வரைப் பெறுதல்

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

 

பரிமேலழகர் உரை:

குழல் இனிது யாழ் இனிது என்ப - குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர். ('குழல்', 'யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.).

 

Translation:

'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred, 

Who music of their infants' lisping lips have never heard.

 

Explanation:

"The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children.