தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
பரிமேலழகர் உரை:
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். (பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.).
Translation:
Sire greatest boon on son confers, who makes him meet,
In councils of the wise to fill the highest seat.
Explanation:
WThe benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.