Jan 182023

பாரதியார் கவிதை

மனதில் உறுதி வேண்டும்,

         வாக்கினிலே இனிமை வேண்டும்;

 நினைவு நல்லது வேண்டும்.

         நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; 

கனவு மெய்ப்பட வேண்டும்         

         கைவசமாவது விரைவில் வேண்டும்;

தனமும் இன்பமும் வேண்டும்,        

           தரணியிலே பெருமை வேண்டும்;

           

கண் திறந்திட வேண்டும்,

            பெண் விடுதலை வேண்டும்.

காரியத்தில் உறுதி வேண்டும் ; 

            பெரிய கடவுள் காக்க வேண்டும்; மண் பயனுற வேண்டும், 

          வானகமிங்கு தென்பட வேண்டும்.

உண்மை நின்றிட வேண்டும் !

          

              -சுப்பிரமணிய பாரதியார்