Feb 032023

அறத்துப்பால் -இல்லறவியல் - விருந்தோம்பல்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.

 

பரிமேலழகர் உரை:

செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.).

Translation:

With smiling face he entrains each virtuous guest, 

'Fortune' with gladsomemmind shall in his dwelling rest.

Explanation:

Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.