Feb 142023

உடுவில் மகளிர் கல்லூரி

உடுவில் மகளிர் கல்லூரி (Uduvil Girls' College) இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டதில் உடுவில் கிராமத்தில் அமைந்துள்ளது. பெண்கள் பாடசாலையான உடுவில் மகளிர் கல்லூரி யாழ்ப்பாணத்தின் பிரபலமான பாடசாலைகளுள் ஒன்றாகும். 1824 ஆம் ஆண்டில் அமெரிக்க மிசனரியினைச் சார்ந்த ஹரியற் வின்சிலோ அம்மையாரால் பெண்கள் தங்கிப் படிப்பதற்கான வதிவிட வசதியுடன் நிறுவப்பட்டது. தெற்கு ஆசியாவிலேயே பெண்கள் தங்கிப் படிப்பதற்கான வதிவிட வசதியுடன் அமைக்கப்பட்ட முதலாவது பெண்கள் கல்லூரி இதுவேயாகும். ஹரியற் வின்சிலோ அம்மையாரே இக்கல்லூரியின் முதல் அதிபராகவும் இருந்தார்.

Uduvil Girls' College
உடுவில் மகளிர் கல்லூரி
அமைவிடம்
யாழ்ப்பாணம், இலங்கை
அமைவிடம் 9°44′04.40″N 80°00′57.70″E
தகவல்
வகை தனியார் பள்ளி
குறிக்கோள் THE TRUTH SHALL MAKE YOU FREE
தொடக்கம் 1824
நிறுவனர் ஹரியட் வின்சிலோ அம்மையார் 
தரங்கள் 1–13
மாணவர்கள் 1600
மொழி தமிழ், ஆங்கிலம்