ஒருநாள் அக்பரோட அரசவைக்கு ஒரு முதியவர் வந்தார் அரசர்கிட்ட எனக்கு நீதி வேணும்னு கேட்டாருஅந்த பெரியவர்உடனே அரசர் என்னனு விசாரிச்சார் . அதுக்கு அந்த பெரியவர் சொன்னார் நான் என்னோட மனைவியோட புனித யாத்திரை செய்ய நினச்சேன்.அப்ப என்கிட்ட இருந்த பணத்தை எல்லாம் ஒரு பெட்டியில போட்டு என்னோட நண்பன் கிட்ட கொடுத்து பாதுகாக்க சொன்னேன்.
திரும்பி வந்து கேட்ட போது நான் எந்த பெட்டியையும் வாங்கலைனு அந்த நண்பன் சொன்னதா சொன்னார்.
இத கேட்ட அரசர் ரொம்ப கோபமடைஞ்சார். மறுநாள் அந்த நண்பனை வரவழைச்சு விசாரிச்சார் அந்த நண்பன் இந்த முதியவரை பாத்ததே இல்லைனும் தான் எந்த பெட்டியையும்,பணத்தையும் வாங்கவே இல்லைனும் சத்தியம் பண்ணி சொன்னான். உடனே அரசர் பீர்பால் கிட்ட இந்த பிரச்சனைக்கு முடிவு சொல்ல சொன்னார்.
உடனே பீர்பால் அந்த முதியவர்கிட்ட நீங்க எங்க வச்சு அந்த பெட்டிய கொடுத்தீங்கன்னு கேட்டார்.அதுக்கு அந்த முதியவர் என்னோட பலா தோட்டத்துல இருக்குற பெரிய பலா மரத்தடியில் வச்சுதான் கொடுத்தேன்னு சொன்னார்.
உடனே பீர்பால் அப்ப அந்த பலா மரத்தை சாட்சி சொல்ல கூட்டிகிட்டு வாங்கன்னு சொன்னார்.
இத கேட்ட அரண்மனையில் இருந்த எல்லாரும் ரொம்ப குழம்பி போனாங்க அப்ப தான் பீர்பால் திரும்பவும் சொன்னார். நீங்க சொல்றது உண்மையா இருந்தா நீங்க போய் முதல்ல அந்த பலா மரத்த கூப்பிடுங்க அப்படி அது வரலைனா அடுத்து நடக்க வேண்டியதை பார்ப்போம் சொன்னார்.
உடனே அந்த முதியவரும் அந்த பலா மரத்தை கூப்பிட போனார். ரொம்ப நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் அவரோட நண்பர்கிட்ட ஏன் இவ்வளவு நேரம் ஆகுது அந்த மரம் எங்க இருக்குனு கேட்டார்.
அதுக்கு அந்த நண்பர் சொன்னாரு பீர்பால் அவர்களே அந்த பலா மரம் ஊருக்கு வெளியில இருக்குற குட்டைக்கு பக்கத்துல இருக்குனு சொன்னார்.
கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா திரும்பி வந்த முதியவர் ,தான் எவ்வளவு கூப்பிட்டும் அந்த மரம் வரலைன்னு சொன்னார்.உடனே பீர்பால் சொன்னார்.ஒண்னும் கவலை படாதீங்க அந்த மரம் உங்களுக்கு முன்னாடியே இங்க வந்து சாட்சி சொல்லிட்டு போய்டுச்சுன்னு சொன்னார்.
இத கேட்ட அக்பரும் ,அரசவை பெரியோர்களும் திகைப்படைஞ்சாங்க ,அக்பர் கேட்டார். அது எப்ப நடந்துச்சு பீர்பால் அவர்களேனு கேட்டார்.
அதுக்கு பீர்பால் சொன்னாரு இந்த முதியவரை பார்த்ததே இல்லைனு சொன்ன இந்த துரோகிக்கு அந்த பாலா மரம் இருக்குற இடம் எப்படி தெரிஞ்சதுனு கேட்டார்.
அதனால அந்த முதியவர் சொல்றதுதான் உண்மைனு சொல்லி ,அந்த துரோகிய சிறைல அடைக்க உத்தரவிட்டார்.இத பார்த்த எல்லாரும் பீர்பாலோட அறிவு நுட்பத்தை பாராட்டினார்கள்.