Feb 192023

அறத்துப்பால் -இல்லறவியல் - இனியவை கூறல்

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்குவது.

 

பரிமேலழகர் உரை:

இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் - அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி? ('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.).

 

Translation:

Who sees the pleasure kindly speech affords, 

Why makes he use of harsh, repellant words?.

Explanation:

Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?.