Feb 252023

அறத்துப்பால் -இல்லறவியல் - செய்நன்றி அறிதல்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.

 

பரிமேலழகர் உரை:

தினைத்துணை நன்றி செயினும் - தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் - அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார். ('தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.).

 

Translation:

Each benefit to those of actions' fruit who rightly deem, 

Though small as millet-seed, as palm-tree vast will seem.

Explanation:

Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit.