தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்.
பரிமேலழகர் உரை:
தக்கார் தகவிலர் என்பது - இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். (தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.).
Translation:
Who just or unjust lived shall soon appear:
By each one's offspring shall the truth be clear.
Explanation:
The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.