செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
பரிமேலழகர் உரை:
ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. ( 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.).
Translation:
'Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shun.
Explanation:
That is virtue which each ought to do, and that is vice which each should shun.