Dec 192022

திருக்குறள் - அறத்துப்பால் -பாயிரவியல் - அறன்வலியுறுத்தல்

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.

 

பரிமேலழகர் உரை:

ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. ( 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.).

Translation:

'Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shun.

Explanation:

That is virtue which each ought to do, and that is vice which each should shun.