வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளரது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை
பேருக் கொருநிற மாகும்.
சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.
எந்த நிறம் இருந்தாலும் - அவை
யாவும் ஒரேதரம் அன்றோ?
தேற்ற மென்றுஞ்சொல்ல லாமோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃ
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்- அதில்
மானுடர் வேற்றுமை இல்லை.
எண்ணங்களை செய்கைகள் எல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.
-மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி